ஶ்ரீப43வானுவாச1 |

3ஹூனி மே வ்யதீ1தா1னி ஜன்மானி த1வ சா1ர்ஜுன |

தா1ன்யஹம் வேத3 ஸர்வாணி ந த்1வம் வேத்121ரந்த11 ||5||

ஶ்ரீ-பகவான் உவாச——ஒப்புயர்வற்ற பகவான் கூறினார்; பஹுனி——-பல; மே—-—என்னுடைய; வ்யதீதானி—-கடந்துவிட்டன; ஜன்மானி———பிறப்புகள்; தவ—-—உன்னுடைய; ச—-—மற்றும்; அர்ஜுனா——அர்ஜுனன்; தானி——அவைகள்; அஹம்——நான்; வேத—--அறிவேன்; ஸர்வாணி——அனைத்தும்; ந——இல்லை; த்வம்——நீ வேத்த——அறிக; பரந்தப-—-எதிரிகளை எரிப்பவனான அர்ஜுனா (ந வேத்த—அறியாய்)

అనువాదం

BG 4.5: பகவான் கூறினார்: அர்ஜுனனே, நீயும் நானும் பல பிறவிகள் பெற்றிருக்கிறோம். ஓ பரந்தபா, நான் நான் உன்னுடைய அனைத்து பிறவிகளையும் நினைவில் வைத்திருக்கும் பொழுது நீ அவைகளை மறந்து விட்டாய்.

వ్యాఖ్యానం

மனித உருவில் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனின் முன் நிற்பதால், அவரை மனிதர்களுடன் ஒப்பிடக்கூடாது என்று ஸ்ரீ கிருஷ்ணர் விளக்குகிறார். ஒரு நாட்டின் ஜனாதிபதி சில சமயங்களில் சிறைக்குச் செல்ல முடிவு செய்கிறார், ஆனால் ஜனாதிபதி சிறையில் நிற்பதைப் பார்த்தால், அவரும் ஒரு குற்றவாளி என்று நாம் தவறாக முடிவு செய்ய மாட்டோம். அவர் சோதனைக்காக மட்டுமே சிறைக்குச் சென்றிருக்கிறார் என்பது நமக்கு தெரியும். இதேபோல், கடவுள் சில சமயங்களில் ஜட உலகில் அவதரிக்கிறார், ஆனால் அவர் தனது தெய்வீக பண்புகளிலிருந்தும் சக்திகளிலிருந்தும் விலகுவதில்லை.

இந்த வசனத்தின் அவரது கருத்துகளில் சங்கராச்சாரியார் உரைக்கிறார்: யா வாஸுதே3வே அனீஶ்வரஸராவஞாஶங்கா3 மூர்கா3ணாம் தா1ம் பரி1ஹரன் ஸ்ரீ ப43வான் உவாச1 (ஶாரீரக் பாஷ்யம் 4.5 வசனத்தில்). ‘இந்த வசனம் ஸ்ரீ கிருஷ்ணர் கடவுள் தான் என்ற கருத்தில் சந்தேகம் கொண்ட முட்டாள்களை மறுக்க ஸ்ரீ கிருஷ்ணரால் பேசப்பட்டது.’ நம்பிக்கையற்றவர்கள் ஸ்ரீ கிருஷ்ணரும் நம்மைப் போலவே பிறந்தார் என்றும், அவர் நம் அனைவரையும் போலவே சாப்பிட்டார், குடித்தார், தூங்கினார், என்பதால் அவர் கடவுளாக இருந்திருக்க முடியாது என்று வாதிடுகின்றனர். இங்கே, ஆன்மாவிற்கும் பகவானுக்கும் உள்ள வேறுபாட்டை வலியுறுத்த ஸ்ரீ கிருஷ்ணர், அவர் உலகில் எண்ணற்ற முறை அவதரித்தாலும் அவர் ஆன்மாவின் வரையறுக்கப்பட்டுள்ள அறிவுடன் அல்லாமல் ஸர்வ அறிவு உடையவராக இருக்கிறார் என்று கூறுகிறார்.

தனிப்பட்ட ஆன்மா மற்றும் பரமாத்மாவின் இடையே பல ஒற்றுமைகள் உள்ளன. இரண்டும் நித்தியமான, உணர்வு, மற்றும் பேரின்பம் (ஸத்1-சித்1-ஆனந்த்3) இருப்பினும், பல வேறுபாடுகள் உள்ளன. கடவுள் எல்லாவற்றிலும் வியாபித்திருக்கிறார், அதே சமயம் ஆன்மா அது வாழும் உடலை மட்டுமே வியாபித்திருக்கிறது; கடவுள் ஸர்வ வல்லமையுள்ளவர், அதே சமயம் ஆன்மாவிற்கு கடவுளின் கிருபையின்றி மாயாவிலிருந்து தன்னை விடுவித்து கொள்ளும் சக்தி கூட இல்லை; கடவுள் இயற்கையின் விதிகளை உருவாக்கியவர், ஆன்மா இந்த விதிகளுக்கு உட்பட்டது; கடவுள் முழு படைப்பையும் ஆதரிப்பவர், அதே நேரத்தில் ஆன்மா அவரால் ஆதரிக்கப்படுகிறது; கடவுள் எல்லாவற்றையும் அறிந்தவர், அதே நேரத்தில் ஆத்மாவுக்கு ஒரு விஷயத்தில் கூட முழுமையான அறிவு இல்லை.

இந்த வசனத்தில், ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனை ‘பரந்தப’, அதாவது ‘எதிரிகளை அடக்குபவர்’ என்று அழைக்கிறார். அவர் மறைமுகமாக, 'அர்ஜுனா, பல எதிரிகளை கொன்ற ஒரு வீரனான நீ இப்போது உன் மனதில் தோன்றிய இந்த சந்தேகத்திற்கு முன் தோல்வியை ஏற்காமல் நான் உனக்குக் கொடுக்கும் அறிவின் வாளால் இந்த சந்தேகத்தை கொன்று ஞானத்தில் நிலைபெற பயன்படுத்து.' என்று கூறுகிறார்.

Bookmark this Verse

Sign in to save your favorite verses.

Add a Note
Swami Mukundananda
4. ஞான கர்ம ஸன்யாஸ யோகம்

ఏ శ్లోకానికైనా వెంటనే వెళ్లండి

మీరు వెతుకుతున్న జ్ఞానానికి నేరుగా వెళ్లండి

Book with feather

మీ స్వంత గీతను పొందండి

Bhagavad Gita — The Song of God భగవద్గీత
The Song of God
Order Now
Bhagavad Gita for Everyday Living Bhagavad Gita for
Everyday Living
Order Now

మాతో అనుసంధానంలో ఉండండి!

రోజు శ్లోకం

పవిత్ర భగవద్గీత యొక్క శాశ్వత ప్రేరణాత్మక జ్ఞానంతో మీ రోజును ప్రారంభించండి; అది నేరుగా మీ ఇమెయిల్‌కు చేరుతుంది!

"భగవద్గీత - రోజు శ్లోకం" సభ్యత్వం పొందినందుకు ధన్యవాదాలు!

Get Your Own Gita
Bhagavad Gita — The Song of God

భగవద్గీత
The Song of God

Order Now
Bhagavad Gita for Everyday Living

Bhagavad Gita for Everyday Living

Order Now
What's New in
Holy Bhagavad Gita
  • Redesigned home, verse, and chapters pages
  • Personal accounts — sign in with email, phone, or Google
  • Bookmark verses and save notes on any verse
  • Track your reading progress across all 18 chapters
  • Quick-jump to any verse
  • Full site now available in all 6 languages
  • Overall visual polish and consistency